Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

27/2/11,ஞாயிறு மாநாட்டின் இரண்டாம் நாள்.....

காலை கூட்டம் அதிகமாகவே இருந்தது,ஞாயிற்றுக்கிழமையானதால்.பலர் தங்கள் குடும்பங்களுடன் மாநாட்டிற்க்கு தங்கள் பிள்ளைகளுடன் வந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.வாழை மரம்,தோரணங்கள்,அழகு தமிழ் சிற்ப்பங்கள் நம்மை எல்லோறையும் வாங்க வாங்க என்று அழைப்பதுபோல் எனக்குள் ஒரு உணர்வு.

காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு,அறிஞர்கள் கூடும் மண்டபத்திற்க்கு சென்றேன்.அங்கே பல மலேசிய தமிழ் ஆர்வலர்களை சந்தித்து அவர்களுக்கு பிடித்த இலக்கிய புத்தகங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.மலேசிய அன்பர்கள் எங்கள் சிங்கப்பூர் குழுவினர்களுடன் அன்போடும் பாசத்தோடும் நலம் விசாரித்து பழகுவதை பார்த்தேன்,வெவ்வேறு நாட்டு மக்களாக இருந்தாலும் நாம் எல்லோரும் "தமிழ் தாய்" மக்கள் அல்லவா?

காலையில் சிறப்பு சொற்பொழிவுகள் பல நடந்தன.பட்டிமண்றம் போல் இரு நாட்டினறையும் பிரித்து ஒரு கருத்தை பற்றி விவாதிக்க வேண்டும்.

"மலேசியா சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள்"-அங்கத்தின் கரு.

மலேசியா பேச்சாளர்கள்: திரு சை.பீர் முகம்மது,டாக்டர் ஜி.ஜான்சன்,திருமதி நிர்மலா இராகவன்
சிங்கப்பூர் பேச்சாளர்கள்: முனைவர் சீதா இலட்சுமி,திருமதி மீனாட்சி சபாபதி,திருமதி உஷா
அறிமுகம்/தலமையாற்றியவர்: இணைப்பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன்.

இவர்கள் அனைவரும் ஆற்றிய உரையை இரவுவறை கேட்டுக்கொண்டிருக்கலாம் போல இருந்தது,அவ்வளவு சுவாரிசியமாகவும் பல அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்தார்கள்.பேச்சாளர்கள் அனைவரும் 2 மணி நேரத்தில் ஒரு பட்டரையே நடத்திவிட்டார்கள்.

திரு சை.பீர் முகம்மது அவர்கள் அனைவரையும் சிரிக்க வைத்து பலரையும் சிந்திக்க வைத்தார்.மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் உள்ள வேறுபாடுகளை பற்றி அவர் சுவையாக அமைதியாக கூறினார்."பக்தி இலக்கியம்" பற்றியும் அவர் கருத்துறைத்தார்.இலக்கியத்தை பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுப்பதில்லை,பள்ளி ஆசிரியர்கள் ஆரம்பத்திலே இருந்து சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றார். அவர்  சிங்கப்பூர் திரு சே வே சண்முகம் பற்றி புகழ்ந்து,தனது குரு என்று சொல்லி புகழ்ந்து பேசினார்.தன் மலேசியாவில் இருந்து 100 கதை புத்தகங்களை தமிழகத்துக்கு தந்து மலேசியாவிலும் நல்ல கதை இலக்கனம் ஆர்வாலர்கள் இருக்கிறார்கள் என்று மாநாட்டில் பேசினார்,இப்போழுது மலேசியா தமிழ் சமுதாய நூல்கள் உலகெங்கும் உள்ள நூலகங்களில்,தமிழக பல்கலைக்கழகங்களில் இருக்கின்றன என்று சொன்னவுடன் பலத்த கைதட்டல் பார்வையாளர்களிடமிருந்து.

மற்ற பேச்சாளர்களும் மிக அருமையாக பேசி அனைவறையும் கவர்ந்தார்கள்.உண்மையிலேயே நான் மிகவும் பெருமை அடைகிறேன்,இம்மாநாட்டிற்க்கு  வந்து,மலேசிய தமிழ் திறமையாக பேசுபவர்களுடைய பேச்சைக் கேட்பதற்க்கு,ஏற்பாட்டாளர்களுக்கு இத்தருனத்தில் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

சிங்கை திரு குணசேகரன் "புதிய ஊடகங்களில் தமிழ் பயன்பாடு" பற்றி விளக்கி மக்களின் பாராட்டைப் பெற்றார்.எப்படி மாநாட்டின் பாட்டுக்கு இசையமைத்தார் என்பதையும் ஐபோன்,ஐபேட் மூலமாக  எப்படி மக்களுக்கு கற்பிக்க முடியும் என்பதையும் இசையுடன் விளக்கிக் காணிபித்தார்.

மதியம் 1.30க்கு மதிய உணவின்போது வந்திருந்த ஆசிரியர்களிடமும் மணவர்களிடமும் இம்மாநாட்டை பற்றி கேட்டேன்,மிகவும் நன்றாக பயணுள்ளதாக இருக்கின்றதாகவும் அவர்கள் எதிர்பார்த்ததுக்கு மேலாகவே மலேசியா நண்பர்களின் உழைப்பு தெரிகின்றதாகவும்,மலேசிய தமிழ் மக்கள்  இலக்கியங்களை புரிந்து,நன்றாக தமிழ் பேசுகிறார்கள் என்றும் கூறினார்கள்.மதிய உணவு உண்ட பின் கடற்கரையோரம் நடக்கலாம் என்று சென்றேன்.காற்று இதமாக வீசி,கடற்கறையின் அழகில் மயங்க வைத்தது.அப்படியே சிறிது நேரம் கடற்கறையோரம் கண் அயர்ந்தேன்.

மதியம் 2.30க்கு 'கருத்தாடல் மன்றம்' நிகழ்ச்சியில் ஆர்வாளர்களும் ஆசிரியர்,மாணவர்களும் கேள்விகள் கேட்டனர்.
ஒருவர் ஏன் மாநாட்டில்,தமிழ் சிறுவர்களுக்கு நாம் என்ன செய்தோம் இதுவரை  என்று ஒருவரும் கூறவிலை? மற்றொருவர் இருநாட்டிலும் ஒவ்வொறு ஆண்டும் இப்படி பட்ட இலக்கிய மநாடுகள் நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.சுமார் எட்டு பார்வையாளர்கள் மாநாட்டைப் பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

சுமார் 4 மணிக்கு மலேசியா பிரதமர் துணையமைச்சர் மாண்புமிகு டி.முருகையா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.அவரின் உரையில் அவர் தமிழர்களை பிரித்து பார்க்கவேண்டாம்,நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்.நாம் தமிழர்களுக்கு என்றும் கை கொடுத்து உதவ தயாராக இருக்க வேண்டும்,மனதில் நாம் எல்லோரும் வீரமானவர்கள்,நல்ல விடாமுயற்ச்சியுடன் நாம் எப்போழுதும் இருக்கவேண்டும் என்று கூறி,மாநாட்டு ஏற்பாட்டு குழுவினருகளுக்கு நன்றியும் பரிசும் வழங்கினார்.

சிங்கை மாணவர்களின் நடனம் மேடையில் அரங்கேற்றப்பட்டது.

மாநாட்டின் இறுதி கட்டமாக,,இம்மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

அடுத்து வரும் மாநாடுகளிள் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டறைகள் இருக்ககூடும்,இலக்கிய மாநாடுகளில்,இலக்கிய போட்டிகள் நடைபெறும்.மாநாடுகள் குறைந்தது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படலாம்.இரு நாட்டிலும் ஒருவறை தேர்வு செய்து அவர் இலக்கியத்திற்க்கு எவ்வாறு உழைதார்,என்ன சாதித்தார் என்பதை ஏற்ப அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

விடைபெறும் நேரம் மலேசிய புது நண்பர்களிடம் மின்னஞ்சல்,முகநூல் விபரம் மாற்றிக்கொண்டேன்.ஒருவழியாக எதிர்பார்த்து காத்திருந்த இரு நாட்டு இலக்கிய மாநாடு நிறைவு பெற்றது.எதோ தெரியவில்லை ஒரு வித சோகம்! இலக்கிய தமிழ் ஆர்வாளர்களை விட்டு பிரியரோமே என்று  சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி,நல்ல செய்தியை என் வெளிநாட்டு தமிழ் உறவுகளுக்ககு சொல்லவேண்டும் தெரியப்படுத்த வேண்டும் என்று.

வாழ்க வாளர்க தமிழ்!
வணக்கம்.

No comments:

Post a Comment