பாடல்~அறிவுக்கு விருந்தாகும். பாடியவர்~டி.எம்.சொளந்தரராஜன். இசை~எஸ்.வி. வெட்கராமன். படம்~அறிவாளி. இயற்றியவர்~அ.மருதகாசி.
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
உலகுக்கு ஒளி போலே உடலுக்கு உயிர் போல
உலகுக்கு ஒளி போலே உடலுக்கு உயிர் போலே
பயிறுக்கு மழைபோல பயிறுக்கு மழைபோல
பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே அவசியம் கற்றுணர்ந்து பயன்பெரும் நினைப்பாலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெரும் நினைப்பாலே அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வாழும் வழி முறைக்கு இலக்கனமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனிது
வாழும் வழி முறைக்கு இலக்கனமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனிது
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டதும்
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டதும் எம்மதத்திற்க்குப் பொதுவென்னும் பாராட்டைக் கண்டதும்
எம்மதத்திற்க்குப் பொதுவென்னும் பாராட்டைக் கண்டதும்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

No comments:
Post a Comment