ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை.அப்போது,நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.
நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பை தொட்டியில் பழைய பேப்பர்,பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர்,அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து,அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க,நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.
வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விகுறி என்ற நிலையில் அப்போது இருந்தேன்.ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது,இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான,நிலையான ஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து,அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

No comments:
Post a Comment